இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் ?? திடீர் மாற்றம்.. வெளியான முக்கிய அப்டேட்!!
மகளிர் T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசனானது கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை இத்தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் ஏற்பட்ட தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.
UEFA நேஷன்ஸ் லீக் 2024-25: ரொனால்டோவின் போராட்டம் வின்.. சமனில் முடிந்த முக்கிய போட்டி!!
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர் அதே பதவியில் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க தேர்வுக் குழு மற்றும் தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ நிர்வாகம் சந்திக்க உள்ளது. மேலும் ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து அணியின் முக்கிய வீராங்கனையாக இருப்பார் என கூறப்படுகிறது. ஆனால் அணியை வழிநடத்த புதிய உத்வேகத்துடன் கூடிய நபரை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


























