மத்திய அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் – இன்று மாலை பதவியேற்பு!

0
மத்திய அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் - இன்று மாலை பதவியேற்பு!
மத்திய அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் - இன்று மாலை பதவியேற்பு!
மத்திய அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் – இன்று மாலை பதவியேற்பு!

மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2 ஆவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னாக, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 43 புதிய அமைச்சர்கள் இன்று (ஜூலை 7) மாலை பதவியேற்க உள்ளனர்.

அமைச்சர்கள் பதவியேற்பு:

மத்திய அமைச்சரவையில் 2 ஆவது முறையாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னாக, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 43 அமைச்சர்கள் இன்று (ஜூலை 7) பதவியேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில், மத்திய அரசு ஆட்சியை கைப்பற்றியது. அப்போது துவங்கி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. இது தவிர பாஜகவுடனான கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியதும், சில அமைச்சர்கள் காலமானதும் அவர்களது இடங்களும் காலியானது.

ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி – பீகார் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!

அதனால் மற்ற பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் மேலும் சில கூடுதல் பொறுப்புகளை செய்து வந்ததால் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து வரும் 2020 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் புதிதாக 43 அமைச்சர்கள் இன்று (ஜூலை 7) மாலை பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளனர். இவர்களில் 12 பேர் பட்டியல் மற்றும் 8 பேர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ள புதிய அமைச்சரவையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம்!

இதை தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபஸ்ரீ சவுத்ரி, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கிடையில் ஒன்றிய அமைச்சரவையில் புதிதாக பதவி ஏற்க உள்ள சர்பானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ரானே உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!