ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி – பீகார் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!
பீகாரில் வருகிற ஜூலை 12ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் நேரடி வகுப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள்:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு விகிதத்திற்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பீகார் மாநில அரசு பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அம்மாநில கல்வித்துறை வெளியிட்டது.
ஜூலை 8 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!
பீகார் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், ஜூலை 12 முதல் 50% மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும்) மற்றும் பயிற்சி மையங்களில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறப்பதற்கு முன்பு தங்கள் வளாகத்தை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும். விடுதிகள் மற்றும் பள்ளி பேருந்துகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி அட்டவணை – கல்வித்துறை வெளியீடு!!
பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் துப்புரவு, தூய்மை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கவனிப்பதற்காக வெவ்வேறு குழுக்களை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன. 50% மாணவர்களை மாற்று நாட்களில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படவில்லை என்றாலும், 50% ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தினமும் பள்ளிக்கு வரவழைக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.