Stage II NTSE தேர்வு ஒத்திவைப்பு-NCERT அறிக்கை!!!
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சில் (NCERT) அடுத்த ஆண்டு நடைபெற உள்ள stage II, NTSE தேர்வை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளவும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் இரண்டாம் நிலைத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.10-ஆம் வகுப்பு மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மேற்படிப்பிற்கான உதவித்தொகையை வழங்க தேசிய திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வை NCERT எனப்படும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்துகிறது. இந்தத் தேர்வில் 2 நிலைகள் உள்ளன. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறுகிறது.
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!!!
2019 -20-ஆம் ஆண்டுக்கான Stage II, NTSE தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்வை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ள NCERT 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியன்று NTSE தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
இயற்பியல் மற்றும் பயாலஜிக்கான தேர்வும் 2021 பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுவதாக கூறியுள்ளது. அதே தேதியில் Stage II, NTSE தேர்வும் நடத்தப்பட்டால் IOQ தேர்வில் சிலர் பங்கேற்க முடியாத சூழல் உருவாகும் தற்போது, இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, தேர்வு அட்டவணை மாற்றப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது.
மேலும் Stage I, NTSE தேர்வை எந்த மையங்களில் எழுதினார்களோ, அதே மையங்களில் Stage II, NTSE தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக வரமுடியாத சூழ்நிலை உள்ளதால் தற்போது மாணவர்கள் தங்கள் விருப்ப மையங்களை தேர்ந்தெடுக்க வாய்பினை வழங்கியுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்