பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!!!
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் தமிழக பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த திட்டமித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து இறுதியான முடிவு ஏதும் அரசு வெளியிடாததால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு
இந்நிலையில் பள்ளிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என அறிவித்திருந்தது. தொடர்ந்து நோய் அச்சம் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த பரிந்துரை செய்தது.
இவ்வாறாக சூழ்நிலை நிலவி வருகையில் தற்போது தமிழகத்தில் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் ஜனவரி 10-குள் 7500 பள்ளிகளில் பயிற்சியாளர்களுடன் கூடிய அறிவியல் ஆய்வு கூடங்கள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை பெற காலஅவகாசம் நீட்டிப்பு
தொடர்ந்து பேசிய அவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார ஆணை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு தமிழக பாடப்புத்தகம் சிறப்பாக உள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்