தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வசதி இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது மேலும் தனியார் பள்ளிகள் விருப்பப்பட்டால் தேர்வு நடத்தலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.
அரையாண்டு தேர்வுக்கான கட்டுப்பாடுகள்:
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு 9 மாத காலம் முடிவடைந்த நிலையில் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வசதி இல்லாதவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கவனிக்க அரசு வழிவகுத்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் தள்ளுபடி செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை பெற காலஅவகாசம் நீட்டிப்பு
மேலும் தனியார் பள்ளிகள் விருப்பப்பட்டால் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தேர்வுகளுக்கான பணியில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுவருகின்றனர். இதன்படி தற்போது அரையாண்டு தேர்வுகளுக்கான சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இந்த தேர்வை நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தனியார் பள்ளிகள் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு நடத்தி, அதில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது எனவும் தேர்வுக்காக தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்