தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான வரி விலக்கு விவரம் – பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள கணக்குகளில் வழங்கப்படும் வரி விலக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டம்:
தேசிய ஓய்வூதிய திட்டம் பணியாளர்களுக்கு பாதுகாப்பான வருமானத்தை பெற உதவுகிறது. அதாவது, இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக பயனாளர்கள் அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 ஆகிய இரண்டு வகையான கணக்குகளை திறக்க முடியும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அடுக்கு 1ல் கணக்குகள் துவங்க குறைந்தபட்ச பங்களிப்பாக ரூபாய் 500ம், அடுக்கு 2ல் கணக்குகள் துவங்க குறைந்தபட்ச பங்களிப்பாக ரூபாய் 1000ம் டெபாசிட் செய்ய வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும், அடுக்கு 1ல் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் ரூபாய் 50,000 வரை பங்களிப்பிற்கான பலனை பெறலாம் எனவும், சுயத்தொழில் செய்பவராக இருந்தால் 20 சதவீதம் வரைக்கும் முதலீடு செய்து வரி விலக்கு கோரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அடுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் 25 சதவீதம் வரைக்கும் வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
ஜூலை & ஆகஸ்ட் பள்ளி விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!
பயனாளர் அடுக்கு ஒன்றில் முதலீடு செய்யும் போது அறுபது வயதிற்கு முன்பாகவே கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், அடுக்கு இரண்டில் மொத்த முதலீட்டிலிருந்து அறுபது வயதை அடையும்போது திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதியில் 60 சதவீத தொகையை மொத்தமாக திரும்ப பெறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.