சமந்தாவிற்கு முன் ஸ்ருதிஹாசனை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நாகசைதன்யா? ஷாக் ரிப்போர்ட்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்பு ஸ்ருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதிஹாசன்:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மகன் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு நடிக்கும் போது நண்பர்களாக பழகி பின்பு அது காதலாக மாறியது. அதனை தொடர்ந்து காதலித்த இருவரும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
‘மௌன ராகம் சீசன் 2’ சீரியலில் சத்யா எடுத்த அதிரடி முடிவு – பணத்தை திருப்பி கொடுக்க திட்டம்!
இவ்வாறு நல்ல முறையில் சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிறந்துள்ள நிலையில் நாக சைதன்யா சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதிஹாசனை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
அதாவது கடந்த 2013ம் ஆண்டு அவர்கள் முதலில் நட்பாக பழகி பின்னர் காதலாக மாறியதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் நாக சைதன்யா ஸ்ருதிஹாசனை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிந்துள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.