‘மௌன ராகம் சீசன் 2’ சீரியலில் சத்யா எடுத்த அதிரடி முடிவு – பணத்தை திருப்பி கொடுக்க திட்டம்!
விஜய் டிவி “மௌன ராகம்” சீரியலில், சத்யா பணத்திற்காக திருமணம் செய்துள்ளதாக ஷீலா சொன்னதை நம்பி வருண் கோவமாக இருக்கிறார். இந்நிலையில் சீரியலில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
மௌன ராகம் ப்ரோமோ:
மௌன ராகம் சீரியலில் சத்யா மீது வருண் காதலுடன் இருக்கிறார். ஆனால் அது பிடிக்காமல் ஷீலா வருணிற்கு போன் செய்து பணத்திற்காக தான் சத்யா உன்னை திருமணம் செய்து கொண்டாள் என சொல்ல உடனே வருணிற்கு சத்யா மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர் சத்யாவை வெறுப்பது போல நடந்து கொள்கிறார். ஏன் இவர் இப்படி இருக்கிறார் என தெரியாமல் சத்யா இருக்க வருண் சத்யாவை விட்டு டெல்லி போக கிளம்புகிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
அப்போது வருண் அப்பா அவரை தடுத்து நிறுத்தி இப்போ எதற்காக தனியாக போகிறாய் என கேட்கிறார். அதற்கு வருண் சத்யா பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் அவள் என் மீது காட்டும் பாசம் நடிப்பு என சொல்ல, சத்யா கார்த்திக்கிடம் போன் செய்து நடந்ததை சொல்கிறார். கார்த்திக் வருணை சந்தித்து பேச இதை எல்லாம் கேட்க நீங்க யாரு என கேட்கிறார். பின் வருணிடம் பிளாங்க் செக் ஒன்றை கொடுக்கிறார்.
விமர்சனங்களை தாண்டி வெற்றியின் உச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ஃபரினா – நம்பிக்கையின் நாயகி!
இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சத்யா கதவை திறக்க வருண் எழுந்து செல்கிறார். உங்களிடம் பேச வேண்டும் என சத்யா சொல்ல அதை எல்லாம் ஷீலா மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறேன் அதனால் உங்க மீது உள்ள அன்பு எல்லாம் பொய் என சொன்னீர்கள் அல்லவா நான் எப்படியாவது பணத்தை திருப்பி கொடுத்திருவேன் என் பாசம் உண்மை என நிரூபிப்பேன் என சத்யா சொல்கிறார். வருண் அதை கேட்டு குழப்பமடைகிறார்.