
ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் வெச்சுருக்கீங்களா?.. அப்போ இந்த நிபந்தனைகளை பற்றி தெரிஞ்சுக்கோங்க..
இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வங்கி சேமிப்பு கணக்குகள் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மேலும், பள்ளியில் பயிலும் போதே சேமிப்பு கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், ஒருவர் ஒரு வங்கியில் 1 அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கை தொடங்க நினைப்பவர்களுக்காக தான் இந்த பதிவாகும்.
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு..!! 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடரும் தடை..!!
அதாவது, ஒரு வங்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளை நீங்கள் பராமரிக்க வங்கிகள் எந்த கட்டுப்பாடும் விதிப்பது இல்லை. மேலும், அன்றாட செலவுகள், விடுமுறை மற்றும் அவசர கால நிதி போன்ற குறிப்பிட்ட இலக்குகளுக்காக பல சேமிப்பு கணக்குகளை மக்கள் தொடங்கலாம். இதை தொடர்ந்து பல கணக்குகளை கண்காணிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். அதாவது, இரண்டு கணக்குகளின் தொகுப்பைக் கண்காணித்து அவற்றின் பிழைகள் மற்றும் முரண்பாடுகளை உறுதி செய்ய அதிக நேரம் எடுக்கும். மேலும், நீங்கள் வைத்திருக்கும் அனைத்து கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதங்கள் செலுத்த வேண்டும். எனவே, உங்களால் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடிந்தால் மட்டுமே பல கணக்குகளை தொடங்குவது சாத்தியமாகும்

























