WhatsApp வாயிலாக பண மோசடி – ரூ. 69 லட்சத்தை இழந்த நபர்.. உஷாரா இருங்க மக்களே!
வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தே வேலை வழங்குவதாக கூறி ரூ. 69 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மோசடி:
வேலை தேடும் நபர்களை குறி வைத்து மோசடி செய்யும் நபர்கள் பணம் பறித்து வருகின்றனர். இது தொடர்பாக தற்போது புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் பணம் கையாடல் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வேலை வழங்குவதாக கூறி வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பேசி டெலிகிராம் செயலில் வேலைகளை ஒதுக்கியுள்ளனர்.
SSC தேர்வில் ஜெயித்து அரசு அதிகாரியாக மாற வேண்டுமா? – அறிமுக வகுப்புகள்! முற்றிலும் இலவசம்!
ஆரம்பத்தில் 1,200 முதல் 10,000 வரை ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர். பிறகு முதலீடு செய்து வருமானம் ஈட்ட ஆசை வார்த்தை பேசியதை அடுத்து கடந்த 4 மாதங்களில் சுமார் ரூ. 69 லட்சம் வரை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார். இந்த தொகைக்கு எந்த பதிலும் கிடைக்காததால் அவர் இது குறித்து ஆராய்ந்ததில் மோசடி நபர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து பணத்தை இழந்த நபர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.