இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. இந்நிலையில் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து 14 நாட்களுக்கு நீட்டிக்கலாமா அல்லது விலக்கிக் கொள்ளலாமா? என்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
காணொலிக்காட்சி ஆலோசனை:
இந்தியாவில் இதுவரை 3 முறை முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 11ம் தேதி நடத்திய ஆலோசனையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். அதில் ஊரடங்கை நீட்டிப்பதில் மாநிலங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
கடலோரக் காவல்படையில் வேலை!
ஆலோசனையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய்த்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் ஆகியவை பற்றியும், ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? என்பது குறித்து மாநில முதல்வர்கள் விளக்கம் அளித்தனர்.
ஊரடங்கு நீட்டிப்பா..?
நாடு முழுவதும் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க சில மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் ஊரடங்கை மே 3 உடன் முடித்துக் கொள்ள வலியுறுத்தி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |