தமிழகத்தில் நவீனமாகும் முக்கிய துறைகள் – பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம்!
தமிழகத்தில் அனைத்து அரசுத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு துறை ஒன்றில் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வசதி
தமிழகத்தில் பல்வேறு அரசு சேவைகள் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அந்த வகையில் மின் கட்டணம், ரேஷன் கடை கட்டணம் போன்றவற்றை மக்கள் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குடிநீர் வரியும் ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதியை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்து பாதைகள் திடீர் மாற்றம்!
தற்போது குடிநீர் வரி அளிக்க பணிமனை அலுவலகங்களில் தனி அறைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் வருகிற அக். 1 முதல் இந்த வசூல் மையங்கள் செயல்படவில்லை. முன்னதாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்ட நிலையில், அதனை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி குடிநீர் வரி பணமாக ஏற்கப்படாது. மேலும் தமிழகத்தில் டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க சென்னை குடிநீர் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.