தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு Confirm.. இனி கவலை இல்லை – அமைச்சர் சூப்பர் தகவல்!
தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுக்கு ரொக்கப் பரிசுடன், பச்சரிசி, சர்க்கரை,நெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் இந்த முறை ரொக்க பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 100 ml அல்லது 500 ml ஆவின் நெய் வழங்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ரொக்க பரிசு தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலமாக உரிய நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவது உறுதி செய்ய முடியும் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் – பள்ளிக்கல்விதுறைக்கு அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
தற்போது பொங்கல் பண்டிகை வருவதற்கு சற்று நாட்களே உள்ளதால் பொங்கல் பரிசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தொடர்பான அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு புயல் காரணமாக பொங்கல் பரிசு குறித்த முடிவை எடுக்க இயலவில்லை என கூறியுள்ளார். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பொங்கல் பரிசு தொடர்பாக தமிழக முதல்வர் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தி விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.