இனி கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்று. அதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “முக்கிய திருவிழா நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் முதல்கட்டமாக 10 திருக்கோயில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்”.
வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது BCCI.. யாரெல்லாம் தேர்வாகியுள்ளார் என தெரியுமா..??
அதன்படி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி முருகன் கோயில் தைப்பூசம் நடைபெறும் நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்றும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருநாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, தற்போது “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்”.
Join the ExamsDaily Whatsapp Group



























