இனி தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்.. அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவை அனைத்தையும் மாற்றி தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தலைமையிலான கூட்டம் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கும் விதியை தமிழக அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. அதாவது, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் “தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், மாதம் இருமுறை தமிழ்நாடு வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறைகள் மூலம் இதற்கான ஆய்வு நடவடிக்கைகள் நிர்வகிக்கபடும் என தெரிவித்துள்ளார்”.
























