தமிழகத்திற்கு குட்பை சொல்லும் மிக்ஜாம் – நாளை கரையை கடக்கும்!
வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிரட்டும் புயல்:
டிசம்பர் 3ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில நிலவிய மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணியளவில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று தீவிர புயலாக சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு பகுதிகளில் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூர் ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியான நாளை முற்பகல் தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வைத்த செக் – இனி யாரும் தப்ப முடியாது!
இந்த சமயத்தில் காற்றின் வேகமானது 100 முதல் 110 கிலோமீட்டர் வேகம் வரை வீசப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயல் நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வெள்ள காடாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் கரையை கடந்த பிறகு இயல்புநிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.