அரசு ஊழியர்களுக்கு வைத்த செக் – இனி யாரும் தப்ப முடியாது!
தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் அரசு புதிய நடவடிக்கை ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை:
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதே போல் புதுச்சேரியிலும் 2024 ஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்துறை வாரியத்தில் மொத்தம் 2811 பிரிவு அலுவலகங்கள், 744 உப கோட்டங்கள், 176 கோட்டங்கள், 44 மின் பகிர்மான வட்ட அலுவலகங்கள் போன்றவை உள்ளது.
நாடே எதிர்பார்த்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் – முழு விவரம்!
ஆனால் களப்பிரிவு, கணக்கீடு போன்ற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதில்லை என்றும் ஒரு சிலர் பணிக்கு வராமலேயே வருகை பதிவியினை நிரப்பி விடுவதாகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசானது மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் ஆதார் எண் இணைப்பு அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைவில் இதற்கான பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.