நாடே எதிர்பார்த்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் – முழு விவரம்!
இந்தியாவில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் குறித்த அறிவிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
சட்டசபை தேர்தல்
இந்தியாவில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றது.
இனி சிலிண்டர் பெற இது கட்டாயம் – உடனே அப்டேட் பண்ணுங்க!
மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை தட்டி சென்றது. அதனை தொடர்ந்து இன்று (நவ. 4) மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் இசட்.பி.எம். கட்சி 27 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த கட்சி எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் ஆளும் கட்சியாக மாறியுள்ளது.