IPL பிளே ஆப்காக 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் இரவு 1 மணி வரை இயங்கும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் ஐபிஎல் பிளே ஆப் நடைபெற இருப்பதால் இரண்டு நாட்களுக்கும் மெட்ரோ ரயில் இரவு ஒரு மணி வரைக்கும் இயங்கும் என மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ இயக்கம்:
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண ஆயிரங்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஸ்டேடியத்தில் குவிந்தனர். அதே போல நாளை நடைபெற இருக்கும் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளை கண்டு களிப்பதற்காக லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் பல ஊர்களில் இருந்தும் வர இருக்கிறார்கள். எனவே, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
அதாவது, நாளை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும் என்பதனால் பயணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மெட்ரோ ரயில் பயண சீட்டுகளை whatsapp மூலமாகவே கியூ ஆர் கோடு அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலின் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் இரவு 11 மணிக்கு மூடப்படும். ஆனால், நாளை சென்னையில் பிளே ஆப் நடைபெற இருப்பதால் கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்களுக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் இரவு ஒரு மணி வரைக்கும் மெட்ரோ டிக்கெட் கவுண்டர்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.