மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு – இனி டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டாம்!!
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது முக்கிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மெட்ரோ டிக்கெட்:
நாட்டின் முக்கிய நகரங்களில் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் வசதி தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிக அளவிலான போக்குவரத்து இடையூறுகளை சரி செய்யும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் சாதாரண போக்குவரத்தை விட மெட்ரோவில் பயணிக்கும் போது மிகவும் குறைந்த அளவிலான நேரம் மட்டுமே ஆகிறது. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மிகவும் தீவிர நிலையில் நடந்து வரும் நிலையில் CMRL நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
அதன்படி தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ பயன்பாட்டை நிறுத்திவிட்டு தேசிய பொது இயக்க அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அட்டையானது பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும், இந்த பயண அட்டையை வைத்து சென்னை மட்டுமின்றி நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க முடியும். மேலும் சென்னை எம்.பி.சி பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மெட்ரோ அட்டையை போன்று இதனை நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமது வங்கி கணக்குடன் இந்த தேசிய இயக்க ட்டி இணைக்கப்படும். இதனால் நமது வங்கி கணக்கில் இருந்து தேவையான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அமலுக்கு வரும் பட்சத்தில் மெட்ரோ பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்பதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.