நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் – போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
நடிகை மீரா மிதுன் சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் என்பவரை அவதூறாக பேசிய வழக்கை தொடர்ந்து அவர் நேற்று (ஆகஸ்ட் 25) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 26) அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நடிகைக்கு ஜாமீன்
தமிழ் திரையுலகில் துணை நடிகையாகவும், மாடலாகவும் இருந்து வரும் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்றுக்கொள்ளாத அவர், கேரளா மாநிலத்தில் தலைமறைவாக இருந்து வந்தார்.
SBI வங்கியில் போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு – எச்சரிக்கை பதிவு!
அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் அவரை கேரளாவில் வைத்து மடக்கி பிடித்து கடந்த 14 ஆம் தேதி அன்று கைது செய்தனர். இதையடுத்து அவர் தனது ஆண் நண்பர் சாம் அபிஷேக் உடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் என்பவர், தன்னை அவதூறாக பேசியதாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கு தொடர்பாக நடிகை மீரா மிதுன் நேற்று (ஆகஸ்ட் 25) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை இன்னும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறி அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீரா மிதுன் மீதான விசாரணைக்கு, போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.