SBI வங்கியில் போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு – எச்சரிக்கை பதிவு!
இந்தியாவின் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் பெயரில் போலியான நியமனம் வெளியிடுவது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
போலி நியமனம்:
நாடு முழுவதும் ஆன்லைன் வணிகம் மற்றும் சேவைகள் அனைத்து துறைகளிலும் பிரபலமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த சேவைகள் புழக்கத்தில் இருந்த போதிலும், அனைத்து தரப்பு மக்களிடமும் ஆன்லைன் வர்த்தகம் சென்று சேரவில்லை. ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கத்தின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் ஆன்லைன் வழி சேவைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து விட்டது.
சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீண்டும் அதிரடி கைது – காவலில் எடுக்க போலீசார் திட்டம்!
இதனால் பல நன்மைகள் உள்ள போதிலும், ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகளும் அதிகரித்து விட்டது. சமீபத்தில் ஆன்லைன் மூலமாக தகவல் திருட்டு, போலியான வங்கி கணக்கின் இணைப்பு மூலம் பண மோசடி போன்றவை அதிகரித்து விட்டது. இதேபோல், நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பெயரில் போலியான மோசடி நிகழ்வுகள் நடப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி இணையதளங்கள் வேலை தேடுபவர்களுக்கு போலி நியமனக் கடிதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சில மோசடி இணையத்தளங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள பணியிடங்களுக்கான போலி பட்டியல்கள் மற்றும் தேர்வு கடிதங்களை வெளியிடுகிறது. எஸ்பிஐ ஒருபோதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடாது. பதிவு எண்கள் மட்டுமே வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு தனித்தனியாக எஸ்எம்எஸ், மின்னஞ்சல், போஸ்ட் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், பணியிடம் தொடர்பான அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.