தமிழகத்தில் மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் வரும் மே 12 ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை :

ஒவ்வொரு ஆண்டும் தேனி அருகே அமைந்துள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு வந்து அக்னி சட்டி, காவடி, மாவிளக்கு, கரகம் போன்ற நேத்தி கடன்களை பக்தர்கள் செய்து விட்டு செல்வதுண்டு. மேலும், இந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் வரும் மே 9 ஆம் தேதி மலர் வாகனத்தில் கௌமாரியம்மன் உலா வருதல், பத்தாம் தேதி முத்து பல்லக்கில் கௌமாரியம்மன் புறப்படுதல் மற்றும் மே 11 ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் கௌமாரியம்மன் பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அப்டேட் – குறையும் மண்ணெண்ணெய் அளவு ! மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை!

இதனை தொடர்ந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு வரும் மே 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அடுத்ததாக மே 16ஆம் தேதி திருவிழாவை நிறைவு செய்யும் விதமாக கௌமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தன்று மே பன்னிரண்டாம் தேதி தேனி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!