தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அப்டேட் – குறையும் மண்ணெண்ணெய் அளவு ! மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை!
தமிழக மக்கள் பலர் ரேஷன் பொருள்களை நம்பி இருக்கும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறித்து விளம்பரப் படுத்தும் படி திருவாரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மொத்த தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
UPSC CAPF AC தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – Download Now!
மேலும் இது குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குறைவாக மண்ணெண்ணெய் வழங்குவது குறித்து ரேஷன் அட்டைதாரர்கள் தெரிவிக்கும் புகாரை தவிர்க்கும் விதத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறித்து அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைவரும் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.