மார்ச் 17ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!!
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கை மாநிலம் முழுவதும் தொடங்கி விட்டது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சிகளாக வெளியிட்டு வருகிறது. வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திருத்தப்பட்ட அட்டவணை – மாநில அரசு வெளியீடு!!
தேர்தல் பணிகளில் பொதுவாக மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், முன்னாள் படை வீரர்கள், காவல் துறையினர் போன்றவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குப்பதிவு மையங்களில் ஆசிரியர்கள் அலுவலராக நியமிக்கப்படுவார்கள். தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஊழியர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்து விட்டது.
பயிற்சி வகுப்புகள்:
தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டு விட்டது. நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குப் பதிவு பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்