10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திருத்தப்பட்ட அட்டவணை – மாநில அரசு வெளியீடு!!
பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியம் மாநிலத்தில் நடக்கும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளின் அட்டவணையை மாற்றியமைத்துள்ளது. மேலும், திருத்தப்பட்ட தேதிகளின் படி தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியம்:
பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது. மாணவர்கள் பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு கோரிக்கை வைத்தபோதிலும், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.
ஜெயலலிதா பல்கலை துணைவேந்தராக அன்பழகன் – தமிழக அரசு நியமனம்!!
முந்தைய அட்டவணை:
பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரிய தலைவர் JR.மெஹ்ரோக் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் முறையே ஏப்ரல் 9 மற்றும் மார்ச் 22ம் தேதியும் நடக்கும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் பொதுத்தேர்வுகள் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணை:
அதன்படி, 10ம் வகுப்புக்கான தேர்வுகள் மே 4ம் தேதி முதல் காலை 10 மணி முதல் 1:15 மணி வரையும், 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 20 ம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் 5:15 மணி வரையும் நடக்கும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பொதுத்தேர்வுகளின் அட்டவணையை பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.pseb.ac.in ல் வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்