ஜெயலலிதா பல்கலை துணைவேந்தராக அன்பழகன் – தமிழக அரசு நியமனம்!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகனை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம்:
கடந்த 2020ம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வேலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும், புதிய பல்கலைக்கழகம் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படவும் என்றும் அறிவித்தார்.
ஆர்க்கிடெக்ட் படிப்பில் மாணவர் சேர்க்கை – முழு தகவல்கள் இதோ!!
திறப்பு விழா:
முதல்வரின் அறிவிப்பு படி, புதிய பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்தை முதல்வர் பிப்ரவரி மாதத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும், பல்கலையின் செயல்பாடுகள் துவக்கி வைக்கப்பட்டது.
துணை வேந்தர்:
டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் புதிய பல்கலையின் முதல் துணைவேந்தராக அன்பழகனை நியமிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இவர் வரும் 3 ஆண்டுகளுக்கு டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்