எஸ்.ஐ தேர்வு முடிவுகளில் குளறுபடி – முறைகேடு வழக்கு விசாரணை தீவிரம்!
மாநிலத்தில் எஸ்.ஐ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பலரும் லஞ்சம் கொடுத்து தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக எழுந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.ஐ தேர்வு முடிவு:
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதன் பின்னர், நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது. அதாவது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 20 லட்சம் முதல் 50 லட்சம் வரைக்கும் லஞ்சம் கொடுத்ததாக அறிவிப்பு வெளியானது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மீண்டும் அகவிலைப்படி உயர்வு – அரசின் சூப்பர் அப்டேட்!
இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி போலீசார் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை செய்ததில் ஆட்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டிஜிபி அம்ருத்துப்பால் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த விசாரணையின் முடிவில் லஞ்சம் கொடுத்து தான் உறவினர் மூலமாக ஒருவர் எஸ்.ஐ தேர்வில் வெற்றி பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் சிலர் மட்டுமே சிக்கி இருப்பதாகவும், பல பெயர்கள் விடுபட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.