“நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்”.. மகாவிஷ்ணு வேண்டுகோள்..!! போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!
மூடநம்பிக்கை கருத்தை மாணவரிடம் பரப்பும் விதமாக பேசியதற்காக மகாவிஷ்ணுவை கடந்த செப்டம்பர் 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.
மாணவர்களே உஷார்…கல்விக் கடன் வாங்க போறீங்களா..?? ” அப்போ, இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த மனு இன்று (செப்டம்பர் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
























