மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு உத்தரவு வருகிற மே 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
மகாராஷ்டிரா அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மே 15 வரை நீட்டித்துள்ளது. நேற்று மாலை வெளியிடப்பட்ட உத்தரவில், ஏப்ரல் 14 ஆம் தேதி விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 15 காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமைச் செயலாளர் சீதாராம் குண்டே பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏப்ரல் 14 ம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகளையும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பொது போக்குவரத்தையும் பயன்படுத்த அவசர சேவை ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இருப்பினும் ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்றுகளைப் பொருத்தவரை மகாராஷ்டிரா தான் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும். இதனால் அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்