தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு தினசரி தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
+2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தினசரி தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 3ஆம் தேதி கண்டிப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள கொரோனா சூழலில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தபட முடியாததால், அவர்களது பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதி முதல் +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டது.
ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!
தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வு எழுதுவதற்கு மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நாளை (மே 1) முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு அவரச வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்!!
அந்த சுற்றறிக்கையில், ‘வீட்டிலிருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சியளிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் முக்கியமான கேள்விகளை தேர்வு செய்து அதை தினசரி தேர்வாக நடத்த வேண்டும். இந்த தேர்வுக்கான வினாத்தாள் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஆசிரியர்களின் வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பப்படும். அந்த வினாத்தாளை மாணவர்களுக்கு ஆன்லைனில் வழியாக அனுப்பி வைத்து தினமும் தேர்வு எழுத வைக்க வேண்டும். அந்த விடைத்தாளை திருத்தி மதிப்பெண் விவரத்தை மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும். அதனடிப்படையில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.