ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!
கொரோனாவால் வேலையிழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.
ரேஷன் பொருட்கள் :
கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உலக நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருவதாகவும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளையும் நோய் தடுப்பு நடவடிகைகளையும் மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை நீடிக்கிறது. ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கி உளதால் மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
அன்றாட மற்றும் தினக்கூலிகள் வேலை இல்லாததால் உணவின்றி சிரமப்படுகின்றனர். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 53,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் 8,772 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதனால் இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு அவரச வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்!!
இதனை கருத்திற்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 கிலோ கோதுமை மாவு, இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் இரண்டு கிலோ கொண்டைக்கடலை போன்றவை இருக்கும் எனவும் இப்போது ஒரு லட்சம் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளதகவும் மேலும் தேவைக்கேற்ப பைகள் தயாரிக்கப்படும் எனவும் மக்கள் உடல் நலத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்