1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
நாட்டில் அதிக அளவில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவர்கள்:
நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் மிக அதிகமாக கொரோனா பரவுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வேகமெடுத்து வருகிறது.
உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி எதிரொலி – மனிதர்கள் வேலையிழக்கும் நிலை!!
இதனால் அங்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் பள்ளிகள் திறப்பதில் சிக்கல் எழுந்து வருகிறது. தற்போது அந்த மாநிலத்தில் மாணவர்களின் தேர்வு குறித்து தொடர்ந்து கேள்விகள் வினவப்பட்டு வருகிறது. அனைவரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக மராட்டிய மாநிலத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தார். மேலும் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படலாம் என்றும் விரைவில் இதற்கான முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – ஐ.சி.டி.எஸ் கோரிக்கை!!
மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடியே பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கேள்விகள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து தான் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.