உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி எதிரொலி – மனிதர்கள் வேலையிழக்கும் நிலை!!
உலகில் தற்போது அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக நாளடைவில் அதிக எண்ணிக்கையான மனிதர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். இதனை உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி:
கடந்த ஆண்டு முதல் நாட்டில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரியும் நிலை ஏற்பட்டது. மேலும் சில நிறுவனங்களில் தற்போதைய காலத்திற்கேற்ப டெக்னலாஜியை பயன்படுத்தி பணிகளை செய்து வருகின்றனர். இதனால் கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலையை இழந்தனர். தற்போது இது குறித்து உலக பொருளாதாரத்துறை அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த அறிக்கையின் படி, வருகிற 2025ம் ஆண்டில் மனிதர்களுக்கு இணையாக இயந்திரமும் இருக்குமாம். இதனால் வரும் காலத்தில் 10ல் 6 பேர் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்படும். இது குறித்து PWC 19 நாடுகளில் கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 32,000 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் 56% பணியாளர்கள் நீண்ட நாட்கள் பணியில், சிலர் மட்டும் இருக்க முடியும்.
தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – ஐ.சி.டி.எஸ் கோரிக்கை!!
மேலும் 40% பணியாளர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றும், 60% பணியாளர்கள் தங்களது பணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 40% பணியாளர்கள் தற்போதைய தொழில்நுட்பத்தை கற்று வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் 80% பணியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தில் பணிபுரிய தயார் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக வரும் காலங்களில் சுமார் 8.5 கோடி மக்கள் தங்களது பணியை இழக்கும் நிலை ஏற்பட்டு விடும்.