தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – ஐ.சி.டி.எஸ் கோரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள்:
தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போன்றவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் தக்க பாதுகாப்புடன் பணிகளை செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி மற்றும் அந்த சங்கத்தினர் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். அதன்படி அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் பணியோடு கூடுதலாக தேர்தல் பணியிலும் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதற்கான ஊதியம் வருடம் ஒரு முறை ரூ.7000 கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் முழுமையாக பெற முடியவில்லை.
தமிழகத்தில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தேர்தல் நாளில் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் மற்றும் இருக்கைகள் தங்களுக்கு வழங்குவதில்லை. இதன் காரணமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு மற்ற அதிகாரிகள் போல் சிறப்பு ஊதியம், இருக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலக பணியிலிருந்து விலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனு தேர்தல் ஆணையர், ஐ.சி.டி.எஸ் அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.