மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்; திட்ட நடவடிக்கைகள் என்ன? – மத்திய அரசு தகவல்!
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வ பதிலை அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டத்தை அறிவித்தது. திட்டத்தை அறிவித்து பல ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரையில் பணிகளில் எந்தவித தீவிரமும் இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு காலதாமதம் குறித்தும், கட்டுமானப் பணியை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் ராஜாங்க அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவர் எழுத்துப்பூர்வமாக பதிலை அளித்துள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் வெயில் சுட்டெரிக்கும் – பொதுமக்களே கவனம்!! வானிலை மையம் எச்சரிக்கை!!
அதில் மதுரையின் மருத்துவமனைக்கு எல்லை சுவர் கட்டுவது போன்ற முதலீட்டுக்கு முந்தைய நடைமுறைகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்ட மேலாண்மை ஆலோசகர் மற்றும் திட்டத்திற்கான இறுதி பிளான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26, 2021 அன்று ஜப்பான் அரசு ஜப்பானிய யென் 22,788,000,000 என்ற தொகைக்கு ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது., 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மருத்துவமனை கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் முதலீட்டு நடவடிக்கைக்காக ரூபாய் 12.35 கோடி மற்றும் மதுரையின் மருத்துவமனையின் திட்ட மேலாண்மை ஆலோசனைக்கு ரூபாய் ஆறு கோடியும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்களையும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.