தமிழக அரசு ஊழியர்களுக்கான நல்ல செய்தி – கூடிய விரைவில் DA உயர்வு!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தற்போது ஜனவரி மாதத்திற்கான அவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு ஊழியர்கள் 46 சதவீதத்திற்கான அகவிலைப்படி பலனை பெற்று வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்; திட்ட நடவடிக்கைகள் என்ன? – மத்திய அரசு தகவல்!
அந்த வகையில், தற்போது 16 லட்ச தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது என்பது குறித்து ஊழியர்கள் கடும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கான சாதகமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.