4 மாவட்டங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு 4 மாவட்டங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்து உள்ளது. இது ஏப்ரல் 5ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அங்கு தற்போது வரை 2,95,511 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 3986 ஆகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,096 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசுடன் பேருந்து போக்குவரத்தினை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ வெளியீடு!!
மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறலாம் என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை மேலும் குறைக்கும் நோக்கில் அம்மாநிலத்தில் இன்று முதல் பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், சிந்த்வாரா, ரட்லம், பேட்டுல், கார்கோன் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.