10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில கல்வித்துறை உத்தரவு!!
மத்தியபிரதேச அரசு மாநிலத்தில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை கொரோனா தொற்றின் காரணமாக ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல கல்வி வாரியங்களும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தள்ளிவைத்தும், இறுதித்தேர்வுகளை ரத்து செய்தும் வருகின்றது. மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த பல தீவிர கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – 6 பேர் கொண்ட குழு நியமனம்!!
மத்திய பிரதேச அரசு மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அறிவித்துள்ளது. முன்னதாக 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 30ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே மாதத்தில் நடக்க இருந்தது. மத்திய பிரதேச வாரியம் உயர்நிலை, மேல்நிலை, தொழிற்கல்வி, டிப்ளோமா முன் பள்ளிக்கல்வி மற்றும் உடல் பயிற்சி தேர்வுகளையும் ஒரு மாதம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக மத்திய பிரதேச அரசு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து அறிவித்து. 9 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தும் அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச பள்ளி கல்வித்துறை சார்பில் சமூக வலைத்தளத்தில், இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தும் புதிய தேதியை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்