ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – 6 பேர் கொண்ட குழு நியமனம்!!
ஸ்டெர்லைட் ஆலை:
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் தொற்றினால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சம் ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள நிலையில், ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்க நீதிமன்றத்தின் அனுமதியை நாடியது. நாட்டின் தேவைக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி மட்டும் செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்திலும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையை திறப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
ஆக்ஸிஜன் தயாரிப்பை மேற்பார்வையிட 6 பேர் குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. நீர் அமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் 3 உறுப்பினர்களை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. நாட்டின் ஆக்ஸிஜன் தேவைக்காக மட்டும் தான் ஆலையை திறக்க அனுமதியளிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்