LPG கேஸ் சிலிண்டர் விநியோகம் தடை – வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி!
மாநிலத்தில் ஊதிய ஒப்பந்த கோரிக்கை காரணமாக எல்பிஜி சிலிண்டர் வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக சிலிண்டர் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் வினியோகம்:
கேரள மாநிலத்தில் சிலிண்டர் விநியோக வாகன ஓட்டுனர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கோரி கடந்த பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் காலாவதி ஆகிவிட்டது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட பல்வேறு பேச்சு வார்த்தைகளின் போதும் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. இதன் காரணமாக சனிக்கிழமை மதியம் வரை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கேரள மாநிலம் முழுவதும் நவம்பர் 5ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஏழு ஆலைகளிலும் போராட்டம் நடத்தப்படும். லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் காரணத்தினால் மாநிலத்தில் சமையல் எரிவாயு விநியோகம் தடைபடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேலை நிறுத்த போராட்டங்கள் வாபஸ் பெறப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.