சிறு சேமிப்பு திட்ட கணக்குகளுடன் ஆதார், பான் இணைக்க செப். 30 கடைசி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தங்களது கணக்குடன் ஆதார், பான் எண்ணை இணைக்க செப். 30 கடைசி நாள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
கடைசி நாள் அறிவிப்பு
இந்திய குடிமக்களுக்கு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் இருக்கிறது. இந்நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை இணைக்க செப். 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஓய்வு கால சேமிப்பு திட்டம் என்பதால் அதில் பல பயனாளர்கள் இருக்கின்றனர்.
மேலும் ஓய்வுகாலத்தில் அவர்களின் பண தேவைக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் சேர ஒவ்வொரு நிதியாண்டில் இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை செலுத்தலாம் எனவும் இதன் மூலம் மூலம் வருமான வரி சலுகைகளுக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார், பான் எண்ணை இணைப்பதால் மட்டுமே தொடர்ந்து இந்த சேவைகளை பெற முடியும் என அரசு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.