சென்னையில் இன்று இலேசான நில அதிர்வு – மெட்ரோ நிர்வாகம் காரணமா? நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

0
சென்னையில் இன்று இலேசான நில அதிர்வு - மெட்ரோ நிர்வாகம் காரணமா? நிர்வாகம் கொடுத்த விளக்கம்!
சென்னையில் இன்று இலேசான நில அதிர்வு - மெட்ரோ நிர்வாகம் காரணமா? நிர்வாகம் கொடுத்த விளக்கம்!
சென்னையில் இன்று இலேசான நில அதிர்வு – மெட்ரோ நிர்வாகம் காரணமா? நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதிகளில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.

நிலஅதிர்வு அறிவிப்பு

உலகளவில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்ட ஒன்றாக துருக்கி மற்றும் சிரியா நில நடுக்கம் பற்றிய செய்தி இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்துள்ள நிலையில், பலர் தங்களது உடமைகளை இழந்துள்ளனர். தற்போது வரை அந்த தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர முடியவில்லை. அந்த வரிசையில் தற்போது தமிழகம் இணைந்துள்ளது . அதாவது இன்று சென்னையில் அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதிகளில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து போலீஸ் விசாரணையில் மெட்ரோ ரயில் பணியினால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அட்ராசக்க..இலவச திருமணத்தின் கீழ் ரூ.50 ஆயிரமாக செலவுத்தொகை உயர்வு – அரசாணை வெளியீடு!

மேலும் நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் இருந்த 3 மாடி கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேறி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்கும் என போலீசார் சொன்ன தகவலிற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த உண்மை தன்மை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த செய்தியால் பொதுமக்கள் அச்சமடைந்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!