LIC -ன் அசரவைக்கும் திட்டம் இதோ – உடனே யூஸ் பண்ணிக்கோங்க!
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆனது பல்வேறு பாலிசி திட்டங்கள் வழங்கி வருகிறது. இதில் எல்.ஐ.சியின் ஜீவன் ஆனந்த் பாலிசி முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ரூபாய் 45 செலுத்துவதன் மூலம், பாலிசிதாரர்கள் 35 ஆண்டுகளில் கணிசமான தொகையான ரூபாய் 25 லட்சத்தை திரட்ட முடியும்.
கிரெடிட் கார்டு வேணுமா? இதெல்லாம் தெரியாம வாங்கிடாதீங்க!
இந்த டேர்ம் பாலிசி போனஸ் மற்றும் இறப்பு பலன்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது. விபத்து காரணமாக தனிநபர் ஒருவர் இறந்தால், கூடுதல் காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் கிடைக்கும்.. மேலும், விபத்து காரணமாக பாலிசிதாரருக்கு நிரந்தர ஊனம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், காப்பீட்டுத் தொகையை தவணைகளில் செலுத்த முடியும். ஒவ்வொரு மாதமும் ரூ.1,358 டெபாசிட் செய்வதன் மூலம் 35 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் பெற முடியும்.


























