அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்- உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்- உயர்நீதிமன்றம் உத்தரவு
அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்- உயர்நீதிமன்றம் உத்தரவு
அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்- உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 6-தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்தவிருக்கும் நிலையில் தற்போது அதனுடன் அரியர் தேர்வுகளையும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியர் தேர்வுகள் நடத்த திட்டம்:

கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர அனைவர்க்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. எனவே அரியர் மாணவர்களும் தேர்வு எழுதுமாறு அறிக்கையை யுஜிசி வெளியிட்டது.

கல்விக்கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும்- யுஜிசி உத்தரவு!!!

தற்போது சட்ட கல்லூரி மாணவர்களுக்கும் அரியர் தேர்வினை ரத்து செய்தது குறித்து சஞ்சய் காந்தி என்ற சட்டக்கல்லூரி மாணவர் சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவில் சட்டகல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நிதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, அந்த வழக்கை வாதாடிய அரசு தரப்பு வக்கீல் விஜய் நாராயணன், சட்ட கல்லூரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகளோடு அரியர் தேர்வுகளும் வருகிற ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடத்தவுள்ளதாக அதற்கான அட்டவணை வெளியிட்டு விட்டதாகவும் கூறினார். மேலும் அந்த தேர்வுகள் அனைத்து ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என குறிப்பிட்டார்.

Stage II NTSE தேர்வு ஒத்திவைப்பு – NCERT அறிக்கை!!!

அப்போது மாணவர் தரப்பு வக்கீல் அரியர் தேர்வுகளை விரைவாக நடத்தி அதற்கான முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு எதிர் தரப்பு வக்கீல் அனைத்து மாணவர்களும் ஒன்றாக தேர்வு எழுதுவதால் அரியர் மாணவர்களின் தேர்வு முடிவினை மட்டும் அறிவிக்க சிறிது காலம் ஆகும். என்று குறிப்பிட்டார்.இருதரப்பு வாதங்களையும் ஏற்று கொண்ட நீதிபதி இந்த வழக்கை தள்ளி வைத்தார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!