அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் ‘மேரா ரேஷன்’ செயலி!
நாடு முழுவதுமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகளை பெற்றுக்கொள்ள மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
செயலி அறிமுகம்
மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ், ‘மேரா ரேஷன் ஆப்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பணி நிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் அந்த மாநிலத்திலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் விதமாக இந்த திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த மேரா ரேஷன் ஆப் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான பல சேவைகளை நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும்.
நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அந்த வகையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மேரா ரேஷன் செயலி உதவியுடன் உணவு தானியங்களை பெற முடியும். இது தவிர மேரா ரேஷன் செயலி மூலம், பயனரின் ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்த்து ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க முடியும். அதே போல உங்கள் ரேஷன் கார்டுக்கு இதுவரை எவ்வளவு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, உங்கள் வீட்டிற்கு அருகில் ரேஷன் கடை எங்கு உள்ளது என்பதையும் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ரேஷன் கடை அல்லது ரேஷன் டீலரை மாற்ற விரும்பினால், இதற்கான வசதியும் இந்த மொபைல் செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 10 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. இந்த மேரா ரேஷன் என்ற மொபைல் செயலி மார்ச் 12, 2021 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. குறிப்பாக NFSA பயனாளிகள் அல்லது பயணிகள் ரேஷன் கார்டு சேவைகளை பெறுவதற்கு ONORC திட்டத்தின் கீழ் இந்த ஆப் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – யாருக்கு, எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!
இந்த மேரா ரேஷன் செயலியில் பயனாளிகள் ஆதார் அல்லது ரேஷன் கார்டு எண் மூலம் உள்நுழைய முடியும். இத்திட்டத்தின் மூலம் 5.4 லட்சம் ரேஷன் கடைகளில் இருந்து ஒரு நபருக்கு மாதம் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை அரசு மானிய விலையில் வழங்குகிறது.
மேரா ரேஷன் செயலியின் நன்மைகள்:
- கடையின் விவரத்தை கண்டறியவது
- தானியத்தின் தகுதியை கண்டறியவது
- சமீபத்திய பரிவர்த்தனைகள் பற்றி அறிந்து கொள்வது.
- இணைக்கப்பட்ட ஆதார் நிலையை சரிபார்த்தல்
- இந்த செயலி மூலம் பயணிகள் தங்கள் இடம்பெயர்வு தகவலை பதிவு செய்யலாம்.
அறிவிப்பு விருப்பமும் உள்ளது