தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – யாருக்கு, எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!
தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எப்போது, யாருக்கு வழங்கப்படும் என்ற விவரங்கள் குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.
உரிமை தொகை
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதிஉதவி வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு கொடுக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இவை எப்போது செயல்படுத்தப்படும் என்று மக்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? டிச.25 இல் ஆலோசனை! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இதற்கிடையில் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிக்கையை தயார் செய்யும் படி முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு 25,800 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் நிதி பற்றாக்குறை காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிதி வழங்க இயலாது என சொல்லப்பட்டு வருகிறது.
அதனால் PPH, PPH- AAY மற்றும் NPHH ஆகிய 3 குறியீடுகளை பெற்றிருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் NPHH-S மற்றும் NPHH-NC குறியீடு இருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல அரசு ஊழியர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு இத்தொகை கிடைக்காது. மேலும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், குழந்தை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 நிதி உதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – IOB வங்கி வட்டி விகிதம்! ஆன்லைனில் EMI!
இந்த நிதி உதவி வழங்கும் திட்டமானது, முதல் கட்டமாக வரும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி துவங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டி இருப்பதால் அதில் சில நிதி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் குடும்பத்தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் மகளிர் தினத்தன்று துவங்கப்படலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது தகுதியுள்ள பயனாளர்களை கண்டறிந்து படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.