கையால் செய்யப்படும் காகித தயாரிக்கும் பிரிவு – காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் அறிமுகம்!!
காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் தற்போது கையால் செய்யப்படும் காகித பிரிவினை துவக்கியுள்ளது. இதற்கு “மொன்பா” என்று பெயரிட்டுள்ளனர்.
காதி தொழில் ஆணையம்:
இதன் நோக்கம் கைகளால் செய்யப்படும் காகித பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதே ஆகும். இப்படி கைகளால் செய்யப்படும் காகித தயாரிப்பு முறை 1000 காலம் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!
இந்த தயாரிப்பு முறை தற்போது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழமையான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை குறிக்கும் இந்த தயாரிப்பு முறை அருணாச்சல பிரதேச மாநில மக்களின் வாழ்வாதாரமாக ஒரு காலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பழம்பெரும் இந்த தயாரிப்பு முறையை மேம்படுத்த காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் இதனை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் தற்போது மும்பையில் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆணையத்தின் தலைவராக வினாய் குமார் சக்சேனா பதவி வகித்து வருகிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்