இன்று முதல் மதுபான கடைகள் மூடல் – தேர்தல் எதிரொலி!
கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதனால் மதுபான கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் மூடல்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றுடன் இறுதி கட்ட பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு கேரளாவில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள், பார்கள் மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் செய்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.